மூன்றாவது நாளாக போத்தீஸில் வருமானவரித்துறை சோதனை…

கோவை: போத்தீஸ் ஜவுளி கடையில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள், போத்தீஸ் நிறுவனத்தாரின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை தொடர்கிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது நாளான இன்றும் சோதனையானது தொடர்கிறது.

Advertisement

வருமானவரித் துறை சோதனையில் இரண்டு கடைகளும் மூன்று நாட்களாக பூட்டப்பட்டு உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.