கோவையில் ஊர்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவையில் ஊர்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், உத்தரவுப்படி கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்க்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.

Advertisement

ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள கோவை மாநகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் வருகின்ற 15.12.2025 ஆம் தேதியன்று மாலை 5.00 மணிக்குள் கோவை காந்திபுரம் C1 காட்டுர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும தேர்ச்சி பெறாதவர், 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள், 31.12.2025 என்றும்
மேலும் விவரங்களுக்கு
94981-71363, 94981-72525 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Recent News

கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெயா?- கோவையில் அதன் நிர்வாக இயக்குநர் அளித்த விளக்கம்…

கோவை; கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக வெளியான செய்திக்கு அதன் நிர்வாக இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள்...

Video

எலுமிச்சை சுத்தி போட்டதில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்…

கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி...
Join WhatsApp