முதல்வர் விஜய்க்கு மறதியா? கோவையில் வல்லாரைக் கீரை அனுப்ப முயன்றவர்கள் கைது!

கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

இதனிடையே த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த சூழலில், விஜய்க்கு அவரது தேர்தல் அறிக்கைகளை நினைவூட்டும் விதமாக, தமிழ் புலிகள் கட்சியினர் இன்று அவருக்கு வல்லாரை கீரை அனுப்ப வந்தனர்.

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்த அவர்கள், தபால் மூலமாக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றனர்.

முன்னதாக, அவர்களைத் தடுக்காத போலீசார், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை கைது செய்தனர்.

Advertisement

இதுகுறித்து, தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் கூறுகையில்,

பெண்களுக்கு மாதம் ரூ.2,500, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் கொடுத்திருந்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.

பொதுவாகவே ஆட்சி அமைக்கும் முதலமைச்சர், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனேயே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஆனால் இங்கு அப்படி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

இதனை செயல்படுத்த மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றோம். ஆனால் போலீசார் இதனை தடுத்து நிறுத்துகின்றனர்.

இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் மூன்று மாதங்களில் த.வெ.க. ஆட்சி கவிழும் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...