கோவையில் பர்கரில் புழுக்கள்- உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு…

கோவை: பர்கரில் புழு இருந்ததாக வீடியோ வைரலான நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் கே எப் சி (தனியார்) உணவகத்தில் நேற்று சில இளைஞர்கள் வாங்கிய பர்கரில் புழுக்கள் இருந்ததாக அந்த இளைஞர்கள் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

பர்கர் சாப்பிடும் பொழுது புழுக்கள் நெழிந்ததாகவும் உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பர்கருக்கு பதிலாக மற்றொரு பர்கரை உணவக நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய இளைஞர்கள், சம்பவம் குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

அந்த வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவகத்தில் சமையல் அறை வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி என அனைத்து பகுதிகளையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...