கோவை: பர்கரில் புழு இருந்ததாக வீடியோ வைரலான நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் கே எப் சி (தனியார்) உணவகத்தில் நேற்று சில இளைஞர்கள் வாங்கிய பர்கரில் புழுக்கள் இருந்ததாக அந்த இளைஞர்கள் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பர்கர் சாப்பிடும் பொழுது புழுக்கள் நெழிந்ததாகவும் உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பர்கருக்கு பதிலாக மற்றொரு பர்கரை உணவக நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய இளைஞர்கள், சம்பவம் குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவகத்தில் சமையல் அறை வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி என அனைத்து பகுதிகளையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


