கோவையில் அதிர்ச்சி… 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 48 வயது நபர் கைது

கோவை : கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வடமாநில தொழிலாளியை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வடமாநில தொழிலாளியை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரின் 8 வயது மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு, அதே பகுதியில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கதிர் குமார் மாஜி (48) என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த உறவினர்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சிறுமி மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் மருத்துவ பரிசோதனை மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து கதிர் குமார் மாஜி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற கோவை ‘சிங்கப்பெண்’ சிறப்பு போலீஸ் குழுவினர் பொதுமக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பேசிய பெண் போலீசார், குழந்தைகளை தனியாக விடாமல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்றும், வேலைக்குச் செல்லும் பெற்றோர் நம்பகமான நபர்களின் பொறுப்பில் மட்டுமே குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களின் விழிப்புணர்வே மிக முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை மாதத்திற்கான தேனீ வளர்ப்பு பயிற்சி- விவரங்கள் இதோ…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை மாதத்திற்கான தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்/பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.