தேர்தல் சுற்றுப்பயணம்: கோவையில் இருந்தே தொடங்குகிறேன்: இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலுக்கான தனது சுற்றுப்பயணம் கோவையில் இருந்து தான் தொடங்கும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் எப்போதும் மக்களுடன் பயணிப்பவன். மக்கள் ஆதரவுடன் வரும் சட்டமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று உள்துறை அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார்.

Advertisement

பா.ஜ.க மற்றும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறியது விஜய்யின் கருத்து. தனித்துப் போட்டியிடுவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

எனது சுற்றுப்பயணத்தை வரும் 7ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்குகிறேன். அடுத்தடுத்து 234 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.

Advertisement

எனது சுற்றுப்பயணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

தேர்தலுக்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன். 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க வென்று ஆட்சி அமைக்கும்.

மக்கள் விருப்பப்பட்டு ஒரு கட்சியில் உறுப்பினராக இணைவார்கள். ஆனால், தி.மு.க-வின்ர வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கின்றனர். அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பரிதாப நிலையில் உள்ளது என்பதாகப் பார்க்கிறோம்.

கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டனர். பொய்யை மூலதனமாக வைத்தே ஆட்சி அமைத்தார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பை Z+ பிரிவு பாதுகாப்பாக மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இ.பி.எஸ் பேட்டி குறித்த தங்கள் கருத்தை, வாசகர்கள் கீழே உள்ள கமென்ட் பாக்சில்ஸ் தெரிவிக்கலாம் 👇

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

2 COMMENTS

Comments are closed.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.