கோவையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி

கோவை: ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்காக இலவச Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள்வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் , Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation (Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்மின்மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும்மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மேலும் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது.

Advertisement

தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதாற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்பகால மாத ஊதியமாக சுமார் ரூ.25000/- முதல் ரூ.40,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் ஆட்சித்தலைவர் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சுத்தமாகும் காந்தி மாநகர் ஓடை… நீரைப் பாதுகாக்க சிறுதுளி, பிஎஸ்ஜி முனைப்பு!

காந்திமாநகர் ஓடை புனரமைப்பு பணியை சிறுதுளி, பிஎஸ்ஜி, மாநகராட்சி இணைந்து தொடங்கி தூய்மை பணிகளை மேற்கொண்டன.

Video

நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…

கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில்...