கோவை: கோவையில் 160 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தி பாஜக சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் கோவை மாவட்ட பாஜக சார்பில் சாய்பாபா கோவில் முதல் வடகோவை சிந்தாமணி வரை தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதில் 160 அடி நீள தேசிய கொடியை ஏந்தியவாறும் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியவாறும் வந்தே மாதரம் முழக்கங்களுடன் பேரணி மேற்கொண்டனர்.
இந்த பேரணியை சுதந்திர தினத்தன்றே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ரமேஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




