கோவையில் காட்டெருமை தாக்கி காவலர் பலி!

கோவை: கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தடாகத்தை அடுத்த தோலம்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் கடந்த 10ம் தேதி ஒரு காட்டெருமை புகுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை சம்பவ இடத்திற்குச் சென்று காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காட்டெருமை தோலம்பாளையம் வனக்காவலர் அசோக் குமாரைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அசோக் குமார் சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக வனக்காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டெருமை தாக்கு வனக்காவலர் பலியான சம்பவம் வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெயா?- கோவையில் அதன் நிர்வாக இயக்குநர் அளித்த விளக்கம்…

கோவை; கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக வெளியான செய்திக்கு அதன் நிர்வாக இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள்...

Video

எலுமிச்சை சுத்தி போட்டதில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்…

கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி...
Join WhatsApp