கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார்.

கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில் உள்ள அவரது உறவினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தனது சம்மதம் இல்லாமலேயே குழந்தையின் உடலை கணவர் மற்றும் உறவினர்கள் எடுத்துச் சென்று உடலை எரித்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Advertisement

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிறுமியின் தாயார், எனக்கே தெரியாமல் ஆம்புலன்ஸில் குழந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து பின்புறம் வழியாக எடுத்துச் சென்று விட்டார்கள் என்றும் என்னுடைய சம்மதம் இல்லாமலேயே குழந்தையின் உடலை எரித்தும் விட்டார்கள்.

இனி குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருந்தால் எப்படி குழந்தையின் உடலை மீண்டும் எடுத்து சோதனை செய்வது என்று கேள்வி எழுப்பிய அவர் எனவே தன் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தான் குற்றம் சாட்டுகிறேன் என்று தெரிவித்தார். மருத்துவமனையில் என்னையும் எனும் உறவினர்களையும் அனுமதிக்கவில்லை என்றும் குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றியது கூட தெரியாது என்று தெரிவித்த அவர் குழந்தையின் இறப்பிற்கு நீதி வேண்டும் என்று கூறினார்.

மருத்துவமனையில் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போட மாட்டேன் என்று நான் உறுதியாக இருந்ததாகவும் தனது உறவினர்களும் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போடவில்லை என்று தெரிவித்த குழந்தையின் தாயார் குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் தன்னிடம் சம்மதம் கேட்காமல் கையெழுத்து போட்டு உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊர் சேலத்திற்கு கொண்டு சென்று எரித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். சேலத்தில் அமைச்சர் சம்பத் வரும் போது கூட அவரிடம் கூறர்ச்சித்ததாகவும் ஆனால் அதற்கு கணவரின் குடும்பத்தினர் விடாமல் செய்தார்கள் என்றும் தாக்கினார்கள் என்றும் கூறினார்.

Advertisement

தன் கணவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்று தெரிவித்த அவர் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த குளிர்பானத்தை பருகினேன் அவர் அதில் எதையோ கலக்கி விட்டார் அதனால் அதனை பருகிய சிறிது நேரத்தில் என்ன ஆனது என்று எனக்கே தெரியவில்லை என்று கூறினார். கைதான கார்த்தியின் இல்லத்தில் தனது குழந்தை விளையாட செல்வார் அவரது வீட்டிலும் இரண்டு குழந்தைகள் உள்ளது என்று தெரிவித்த அவர் சில தினங்களுக்கு முன்பு தான் அங்கு குடிப்பெயர்ந்தோம் என்று தெரிவித்தார்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை மருத்துவமனையில் கடைசி நேரத்தில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் செய்தியாளர்கள் யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார் அப்பொழுது அவரும் அவரது உறவினர்களும் செய்தியாளர்களிடம் சற்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

முதலமைச்சரிடம் செல்போனில் பேசியதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உங்களை நேரில் வந்து பார்க்கிறேன் என்று முதல்வர் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் குழந்தையின் உடலை அவசர அவசரமாக எரித்தது தொடர்பாக ஐஜி அவரிடமும் தெரிவித்துள்ளதாகவும் எந்த காரணத்திற்காக அவசர அவசரமாக குழந்தையின் உடலை எரித்தார்கள் என்று தெரியவில்லை அதனை கூற வேண்டும் என்று தெரிவித்தார் மேலும் தான் நிவாரணத்தை கேட்கவில்லை நீதியை தான் கேட்கிறேன் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் கணவர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தான் மது அருந்தவில்லை என்றும் கார்த்தியின் இரண்டாவது மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனையில் அரசு அதிகாரிகள் இந்த வழக்கை அவசரமாக முடிப்பதற்கு செயல்பட்டதாகவும் அப்பா அம்மா இருவரிடமும் பேசி கருத்துக்களை கேட்காமல் அப்பாவிடம் மட்டும் பேசி முடித்து விட்டார்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டார்கள் என்று குழந்தையின் உறவினர் சித்தி தெரிவித்தார்.

மேலும் கைதானவருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை என்பது அவர்கள் அணு அணுவாக சாக வேண்டும் என்றும் வேறு எந்த குழந்தைக்கும் இது போன்ற நடந்து விடக்கூடாது என்றும் தாயார் தெரிவித்தார். தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர் என் மீது தவறு இருந்தால் நான் சிறைக்கு செல்வேன் இல்லையென்றால் அவதூறு பரப்புபவர்கள் மீது புகார் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.