போத்தனூர் ரயில் பாதையில் இரும்புப் பாலம்; மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிக்காக போத்தனுர் ரயில் பாதையின் ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட போத்தனூரில் ரயில் பாதை அமைந்துள்ளது. இவ்வழியாக குறிச்சி-குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இத்திட்டங்களுக்கு ஏதுவாக பாலக்காடு ரயில்வே பாதைக்கு மேற்பகுதியிலும், பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடி பகுதியிலும் பாலம் அமைக்கப்படுகிறது.

இதற்காக ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் குமரன், ரயில்வே உதவி கோட்டப்பொறியாளர் புஷ்பதாஸ் ஆகியோர் இருந்தனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண் கடத்தல்- கோவையில் தம்பதி கைது…

கோவை: கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனர். கோவையில் கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகைகளை பறித்த தம்பதியை போலீசார்...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.