கலைஞர் கருணாநிதி நினைவு தினம்- கோவையில் அஞ்சலி…

கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Advertisement

தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது பல்வேறு பகுதிகளில் அமைதி ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் திரைத்துறையினரும் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் மாநகர மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Advertisement

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், கலைஞருன் திருவுருவ படத்திற்கும் அமைதி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநில தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உக்கடத்தில் பயங்கரம்; ஆயுதங்களுடன் வீட்டைச் சூழ்ந்த கும்பல்… 5 பேர் கைது

உக்கடம் பகுதியில் நள்ளிரவில் வாலிபரின் வீட்டை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.