கூடலூர் நகராட்சியில் எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் கள ஆய்வு…

கோவை: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் எம்எல்ஏ சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த குடிநீர் தொட்டியினை சரிசெய்ய உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் மேற்கொண்ட ஆய்வின் போது பள்ளியில் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்கள் பழுதடைந்து தூணின் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது.

இதையடுத்து அசம்பாவிதம் நடக்கு முன்பாக சேதமடைந்த குடிநீர் தொட்டியினை உடனடியாக சரிசெய்ய நகராட்சி ஆனையர் மூவேந்திரனுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் உத்தரவிட்டார்.

Advertisement

அதேபோல் திருமலை நாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சுனில் ஆனந்த் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்திருப்தை பார்த்து அதை சரி செய்து பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் ஆய்வின்போது 6 வது வார்டு விஜயா நகர் பகுதியில் சாலை அமைத்துக்கொடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்திடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் விரைவில் சாலை அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக கூடலூர் நகரச் செயலாளர் சத்யகுமார், நகர நிவாகிகள் சரவணன், ஷகிலா, பூர்ணிமா, விஜய், விக்னேஷ், வெங்கடேஷ், கவுசிக், மவுரி, அஜித் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர்...

Latest News Coimbatore

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.