அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்- EPS க்கு SPV வேண்டுகோள்…

கோவை: எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Advertisement

அப்போது பதவிகள் திருப்பி தரப்பட்டது குறித்தான கேள்விக்கு அந்த நாங்கள் அதிமுக தலைமைக்கு கொடுத்த கடிதத்திலேயே அனைத்தையும் தெளிவாக சொல்லி இருக்கின்றோம் என்றார்.

கட்சிக்காக உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் ஜெயலலிதா எம்ஜிஆர் காலத்தில் இருந்து உழைத்தவர்கள், எடப்பாடியாருக்காக உழைத்தவர்கள் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்றார்.

அதனால் நான், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் பதவிகள் வேண்டாம், தொண்டராக தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம் என்று தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கின்றோம் எனவே அதிமுக
உறுப்பினராக தொடர்கின்றோம் என்றார்.

மகளிரணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தான கேள்விக்கு வளர்மதி எப்பொழுதும் கூப்பிடுவார், நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை ஆனால் அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம். அதனால் எங்களை அழைக்கவில்லை என்றார்.

நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு என்றும் கட்சிக்காக எம்.ஜி்.ஆர். ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள்,
எடப்பாடிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன் என்றும் கூறினார். கடந்த நான்காம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம்.
ஆனால் கொடுக்கவில்லை என்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரை குறிப்பிட்ட அவர்களிடமே பதில் கேளுங்கள் என்றார்.

எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...