கோவை: கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியதாக கூறிய 21 வயது மாணவியை, நள்ளிரவில் சாலையோரத்தில் பாதுகாப்பாக மீட்ட பிங்க் பேட்ரோல் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிங்க் பேட்ரோல் போலீசார் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
Also Read: கலைத்துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயிற்சி- கோவை ஆட்சியரின் அறிவிப்பு…
விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திப்பதற்காக திருநெல்வேலி செல்ல காத்திருந்ததாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த மாணவியை போலீசார் மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


