இன்ஸ்டாகிராம் காதலரை சந்திக்க நள்ளிரவில் காத்திருந்த மாணவி; கோவையில் மீட்ட Pink patrol

கோவை: கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியதாக கூறிய 21 வயது மாணவியை, நள்ளிரவில் சாலையோரத்தில் பாதுகாப்பாக மீட்ட பிங்க் பேட்ரோல் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிங்க் பேட்ரோல் போலீசார் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

Also Read: கலைத்துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயிற்சி- கோவை ஆட்சியரின் அறிவிப்பு…

விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திப்பதற்காக திருநெல்வேலி செல்ல காத்திருந்ததாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த மாணவியை போலீசார் மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read news: வீட்டிற்குள் செடி வளர்க்க ஆசையா?

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...