கோவையில் நடைபெற்ற தே.ஜ கூட்டணி பொதுக்கூட்டம்- பல்வேறு கருத்துக்களை முன்வைத்த தலைவர்கள்…

கோவை: கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 21 வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவிநாசி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இக்கூட்டத்தில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது,

திமுகவின் காட்டாச்சியை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் காத்திருப்பதாகவும் தமிழக மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக மோடி இன்று வருகை தந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டார் மேலும் தேசிய திறனாக கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கஞ்சா பழக்கம் சரி செய்யப்படும் எனவும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு தமிழக மக்களின் ஒரு வாக்கு கூட செல்ல கூடாது என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,

மத்தியில் இருந்து தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி நமக்கு தந்துள்ளனர், தமிழக முதல்வருக்கு இங்கு என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறார், தமிழகம் சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலையில் உள்ளது, எடப்பாடி யார் போகும் இடத்தில் மக்கள் வெள்ளம் கூடுகிறது என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

“இன்று இந்தியாவே கோவையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது, தமிழகத்தில் நடக்கும் தேர்தல். தமிழகத்தை சுரண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல். ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சி அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்திருக்கிறது, அதிமுக தலைமை தாங்குகிறது, மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவீர்களா?


தீயசக்தி திமுக அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தார். அதன்பின் அம்மா சிறப்பான ஆட்சி கொடுத்தார்கள். பிரதமர் மோடி அவர்கள் உலகத் தலைவர்களால் பாராட்டும் அளவுக்கு இந்திய நாட்டின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர். நம் நாட்டை எத்தனையோ பிரதமர்கள் ஆண்டுள்ளனர், ஆனால் இந்தியா நாட்டிற்கு பிரதமர் மோடி வந்தபின்னரே பெருமை அதிகரித்துள்ளது. இரவு, பகல் பாராமல் உழைக்கும் தலைவர் மோடி. அதிமுக, பாஜக ,பாமக, அமமுக மற்றும் பல கட்சிகள் இணைந்து அற்புதமான வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது.

திமுகவின் ஐந்தாண்டுகாலத்தில் 5 லட்சம் கோடி கடன் தான் சாதனை, கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். தமிழ்நாடு வளர்ச்சிபெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான நிதியும் திட்டங்களும் பெற்றோம், முதன்மை மாநிலமாக இருந்தோம்.

பிரதமர் எங்களின் வேண்டுகோளை ஏற்று நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு 11,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றவில்லை, மத்திய அரசு திட்டம் கொடுக்கவில்லை என்று அவதூறு பரப்புகிறார். பிரதமர் மோடி கொடுத்த திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? கோவை, திருப்பூர், நீலகிரி என 23 தொகுதிகளில், 2021 தேர்தலில் 17 இடங்களை வென்றோம். இன்றைக்கும் அதே கூட்டணி, 23 தொகுதிகளிலும் 100க்கு 100 வெற்றி பெறும். அதுவும் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. 2021ல் 10க்கு 10 வென்றோம். ஒரு இடம் கூட திமுகவுக்குக் கிடைக்கவில்லை, திமுக ஆட்சி செய்தாலும் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக.


அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்லும். கோவை, நீலகிரிக்கு பல திட்டங்கள் கொடுத்தார். ஊட்டி மற்றும் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொடுத்தவர் மோடி. கோவை, நீலகிரி, திருப்பூர் ஒன்றாக இணைந்து இந்த கூட்டம் நடக்கிறது. ஊட்டி திருப்பூரில் இரண்டு மருத்துவக் கல்லூரி கொடுத்தது மத்திய அரசு. திமுகவால் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவர முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்து, அடித்தட்டு மக்களும் குறைந்த செலவில் உயர்கல்வி படிக்கும் சூழ்நிலையை உண்டாக்கினோம்.
அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நாங்கள் இருக்கும்போதே இடம் கொடுத்தோம், ஆனால் திமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை.
திமுக ஊழல் ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இந்த தேர்தல் திமுகவை வீழ்த்தும் தேர்தல். அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். போதையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி, திட்டம் பெற்று தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்குவோம்.
நம் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். 210 இடங்களில் நம் கூட்டணி வெல்வதற்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் அண்ணாமலையை கடுமையாக சாடிய பாலகிருஷ்ணன்…

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உருமாண்டம்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரியகுமாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Video