கோவையில் விஜய் பிரச்சார இடம் தேர்வு; அனுமதி கோரி மனு!

கோவை: கோவையில் அக் 4, 5ம் தேதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நிலையில் போலீஸ் அனுமதி கேட்டி தவெக நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வருகிற அக்டோபர் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து இதற்கு அனுமதி கேட்டு கோவை மாவட்ட த.வெ.க.வினர் போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கழகத் தலைவர் விஜய், சாலை மார்க்கமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்து மக்களைச் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது சிவானந்த காலனி, ராஜு நாயுடு வீதி, டாடாபாத் (No.5 பேருந்து நிறுத்தம் அருகில்)
ஒலி பெருக்கி மூலம் பேசவுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News

குடியரசு துணை தலைவர் வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை…

கோவை: குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் 2 தினங்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப் புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு...

Video

கோவை ஆட்சியர் கொண்டாடிய பொங்கல் விழா- களைகட்டிய அலுவலகம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு...
Join WhatsApp