5 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மொத்தம் 41 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கோவையில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மற்றும் செம்மொழி பூங்கா பணிகள் காரணமாக கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை.

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாநகராட்சியில் அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், உதவி கமிஷனர் குமரேசன் முன்னிலையில், இந்த கூட்டம் நடந்தது.

Advertisement

இதில் பொதுமக்கள், தங்களது அடிப்படை தேவைகள் குறைகள் சம்பந்தமான மனுக்களை அளித்தனர். நடந்த இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 41 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 10,000 மரக்கன்றுகள்- பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.