கோவையில் பாம்பு பிடி வீரர் பரிதாப பலி; நாகப் பாம்பு கடித்து உயிரிழந்தார்!

கோவை: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாம்பைப் பிடிக்க முயன்ற கோவையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர், நாகப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், உடனே பொதுமக்களுக்கு ஞாபகத்திற்கு வருபவர் சந்தோஷ் தான்.

Advertisement

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவிக்கும் சேவையைச் செய்து வந்தார் இவர். ஏற்கனவே நமது இணைய தளத்திலும் சந்தோஷ் பாம்பு பிடித்தது குறித்த செய்திகளை பதிவிட்டுள்ளோம்.

அந்த வகையில், தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்தோஷ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அங்கு சென்ற சந்தோஷ், அந்த நாகப் பாம்பைப் பிடிக்க முயன்றார்.

அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சந்தோஷ்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

அவரது இறப்பு வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விமர்சையாக நடைபெற்ற கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் திருத்தேரோட்டம்

கோவை: கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஶ்ரீ...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...