கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 05.05.2026 மற்றும் 06.05.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.
இந்த பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegetables and fruits), பலவகை பழ ஜாம் (Mixed fruit jam), பழரசம் (Squash, தயார் நிலை பானம் (Ready – to – serve beverage), ஊறுகாய் (Pickles), மிட்டாய்(Candy), பழப்பார் (Fruit bar) ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பேருந்து நிறுத்தம்: வாயில் எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மருதமலை சாலை.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.
தொலைபேசி எண்- 94885 18268
அலைபேசி எண் 0422 6611340
மின்னஞ்சல்: -phtc@tnau.ac.in


