கோவை: மே 4ம் தேதி மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினமான மே 4ம் தேதி அனைத்து வகையான மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று நடைபெற உள்ளதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள FL1 முதல் FL1 வரையிலான அனைத்து மதுபான உரிமம் பெற்ற வளாகங்களை 04.05.2026 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று ‘மதுவிலக்கு நாட்களாக (Dry Day) அறிவித்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மதுபான உரிமத்தளங்களில் மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீதுதமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


