வெள்ளியங்கிரி மலை: வனத்துறையினரை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை! வீடியோ

கோவை: கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக விரட்டுவதும், அதனைப் பார்த்து பக்தர்கள் அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கிருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7வது மலையில் சுயம்புலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதனால், வனத்துறையினர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களாகவே அடிவாரத்திற்கு வரும் யானைகள் அங்குள்ள கடைகள், அன்னதானக்கூடத்தில் புகுந்து உணவுப் பண்டங்களைச் சாப்பிடுகிறது. மேலும் அங்கிருக்கும் பொருட்களைச் சேதப்படுத்திச் சென்று விடுகிறது.

Advertisement

அவ்வாறு வரும் காட்டு யானைகள் வனத்துறையினர் போராடி வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர்.

அந்த வகையில், நேற்று வெள்ளியங்கிரி அடிவாரத்திற்கு வந்த ஒற்றைக் காட்டு யானையைக் கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த வனத்துறை ஊழியர்கள் மேலும் யானை உள்ளே வராமல் விரட்டச் சென்றனர்.

அப்பொழுது அவர்களை யானை விரட்டியது. வனத்துறையினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி தப்பினர். இதனைக் கண்ட அங்கு கூடியிருந்த பக்தர்கள் அலறினர்.

இதனை அங்கிருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது....

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.