கோவையில் பேருந்தில் மயங்கிய பெண்; தக்க நேரத்தில் உதவிய ஓட்டுனர், நடத்துனர்!

கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி விசுவாசபுரத்திற்கு நேற்று ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் அத்திப்பாளையத்தைச் சேர்ந்த மேரி(35) என்ற பெண் பயணம் செய்தார்.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேரிக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்திலேயே அவர் மயங்கி சரிந்து விழுந்தார்.

இதனைப்பார்த்து சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பேருந்தின் ஓட்டுனர் மணிகண்டன், நடத்துனர் தினேஷ் ஆகியோர் மேரியை மீட்டு அதே பேருந்தில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

தொடர்ந்து மேரியை மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்து உறவினருக்கும் தகவல் அளித்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் அந்த பெண் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார்.

தக்க நேரத்தில் பெண்ணுக்கு உதவிய பேருந்தின் ஓட்டுனர், நடத்துனருக்கு சக பயணிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

செவிலியர்களுக்கு விரைவில் நல்ல முடிவு… கோவையில் அமைச்சர் அருண்ராஜ் உறுதி!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், செவிலியர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வருடன் ஆலோசித்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...