கோவையில் குடிநீர் நிறுத்தம் மக்கள் அவதி!

கோவை: குந்தா அணை பராமரிப்பு காரணமாக பில்லூர் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து பில்லூர் குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீர் எடுக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட இடைவெளியில் நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் குந்தா அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பில்லூர் திட்டம் 2, பில்லூர் திட்டம் 3 மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி-வீரகேரளம் திட்டம் போன்ற கூட்டு நீர் வழங்கல் திட்டத்தின் கீழ்குடிநீர் வழங்கல் தடைபட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை என்பதால், பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் இருந்து வருகிறது. பராமரிப்பு பணி காரணமாக பெரும்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையைப் போக்க இடைவிடாத நீர் விநியோகத்தை வழங்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலியுறுத்தியுள்ளோம்.

அதே நேரத்தில், பிற ஆதாரங்களைப் பயன்படுத்தியும் தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். மேலும் பராமரிப்பு பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது....

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.