கோவையில் ஊர்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவையில் ஊர்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், உத்தரவுப்படி கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்க்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.

ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள கோவை மாநகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் வருகின்ற 15.12.2025 ஆம் தேதியன்று மாலை 5.00 மணிக்குள் கோவை காந்திபுரம் C1 காட்டுர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும தேர்ச்சி பெறாதவர், 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள், 31.12.2025 என்றும்
மேலும் விவரங்களுக்கு
94981-71363, 94981-72525 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை தருவது நிறுத்தி வைக்கப்பட்டது…

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.