கோவை சிறையில் போக்சோ வழக்கு கைதி மரணம்!

கோவை: சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் (48). இவர் கடந்த 2017ம் ஆண்டு கூடலூர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2021ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அப்துல் நாசர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதி அடைந்து வந்தார்.

நேற்று சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறை போலீசார் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp