தூய்மை பணியாளருக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் – தரமற்ற உணவை உண்ண முடியாமல் குப்பை தொட்டியில் கொட்டிய வீடியோ…!

கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முதல்வரின் காலை உணவு தரமற்றதாக இருந்ததால், அதை சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதித் தொடங்கப்பட்ட ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சர்ச்சையில் கிளம்பியுள்ள நிலையில், கோவையிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, உண்ண முடியாத அளவிற்குத் தரமற்றதாக இருந்ததால், அந்த உணவைத் போய் குப்பை தொட்டியில் கொட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

அதிகாலையிலேயே எழுந்து வந்து நகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பசியுடன் பணியாற்றக் கூடாது என்பதற்காக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு கல் போன்று கட்டியாக இறுக்கமாக இருந்ததை கையில் எடுக்க முடியாமல், அதை குப்பை கூடையில் கொட்டினர்.

நாங்கள் குப்பைகளைச் சுத்தம் செய்கிறோம் என்பதற்காக, எங்களுக்கும் குப்பை போன்ற உணவையே வழங்குவதா ? இதுவா முதல்வர் சொன்ன திட்டம்?” எனப் பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். பசியால் வாடிய போதிலும், அந்த உணவைச் சாப்பிடப் பிடிக்காமல் பணியாளர்கள் அதனைத் குப்பை கூடையில் கொட்டினர்.

அந்த வீடியோவில் “பசியோடு வேலை செய்கிறோம், ஆனால் இதைப் எப்படி சாப்பிட முடியும், கொட்டவே முடியல கல்லு மாதிரி இருக்கு மைதாவுல பண்ணி இருக்காங்க போல” என்று தூய்மை பணியாளர்கள் கொந்தளிந்துள்ள காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் திறக்கப்பட்டது நான் முதல்வன் செயல்பாட்டு மையம்…

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.