கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் மேற்கொண்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிபுறக்கணிப்பு செய்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
இக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக 23 ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும், யூ.ஜி.சி நிர்ணயம் செய்த ஊதியம் ரூபாய் 57,800 வழங்கிட வேண்டும்.அண்டை மாநிலத்தில் கொடுக்கும் ஊதியத்தை போன்று இங்கு கொடுக்க வேண்டும்.
பெண் விரிவுரையாளர் உனக்கு மகப்பெறு விடுப்பு வழங்கிட வேண்டும்.பி.எப். மற்றும் ஈ.சி.ஏஸ்.பிடித்தம் வேண்டும்.12 மாதங்கள் ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வழங்க மத்தில் அரசை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
உடனடியாக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டத்தை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

