இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் கணினி ஆய்வுக்கூடம் திறப்பு…

கோவை: இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் அரங்கம் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்பு நிதியின் (SREE ANNAPOORNA SRI GOWRISHANKAR HOTELS PVT Ltd) 79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதனை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.3க்குட்பட்ட மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 453 மாணவர்கள் மற்றும் 83 மாணவியர்கள் மொத்தம் 536 மாணவமாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அந்த வகையில் தனியார் பங்களிப்பு நிதியின் கீழ் (SREE ANNAPOORNA SRI GOWRISHANKAR HOTELS PVT Ltd) ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.