கோவை: கள்ளச் சந்தையில் சிலிண்டர்களை பதுக்கிய வழக்கில் பெண் உட்பட 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி சில வியாபாரிகள் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.
அரசு நிர்ணயித்த வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,100 ஆக இருந்த நிலையில், பதுக்கி வைக்கப்பட்ட சிலிண்டர்கள் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஏஜென்சில் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி… Click Here to Read News
தகவலின் அடிப்படையில் பெட்ரோலியம் அதிகாரிகள், சிவில் சப்ளை சிஐடி போலீசாருடன் இணைந்து லட்சுமி மில்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள விநாயகர் கோயில் தெருவில் எரிவாயு ஏஜென்சியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 1,000 வர்த்தக சிலிண்டர்கள் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், வருவாய் துறை அதிகாரிகளால் ஏஜென்சிக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சிலிண்டர் ஏஜென்சி நடத்தி வந்த லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Read news: Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை...
இந்த நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி திவ்யபாரதி (30) மற்றும் சிலிண்டர சப்ளையர்கள் ஈரோடு விஜயமங்கலத்தை சேர்ந்த பிரதிப் (40), கணேசமூர்த்தி (40) ஆகியோர் மீதும் நேற்று முன்தினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் அவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

