குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் பலி; சூலூர் அருகே பரிதாபம்!

கோவை: மீன் பிடிக்கச் சென்ற மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் டி.வி.கே நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுஜித் குமார் (11).

அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் பிரதோஷ் (11). இவர்கள் இருவரும் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள கதிர்மில் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தனர்.

Read also எரிவாயு தட்டுப்பாடு- கோவையில் பள்ளியின் அழுத்தத்தால் மாணவனுக்கு நேர்ந்த சோகம்…

இப்பள்ளியில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வந்ததால், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தான் பள்ளி தொடங்க இருந்தது.

இதன் காரணமாக, நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்ற மாணவர்கள் இருவரும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் குளத்தில் இரு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது, அது காணாமல் போன சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.

Read also கோவையில் பிங்க் பேட்ரோல் மூலம் 55 சிறுவர்கள், முதியவர்கள் மீட்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கண்ணம்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Make In India திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது- கோவையில் கனிமொழி பிரச்சாரம்…

கோவை: Make In India வை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை கேஸ்க்கு வந்திருக்காது என கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி Make In India திட்டத்தை செய்திருந்தால் கேஸ்க்கு இந்த அளவிற்கான ஒரு...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...