கோவை: கோயம்புத்தூர் மில்லேனியம் ரோட்டரி கிளப் சார்பில் கோவை எல்சி மருத்துவமனையின் மருத்துவர் வித்யா ராஜனுக்கு சிறப்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது.
காந்திபுரம் எல்சி மருத்துவமனையின் மயக்கவியல் துறை நிபுணராக மருத்துவர் வித்யா ராஜன் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே கோயம்புத்தூர் மில்லேனியம் ரோட்டரி கிளப் சார்பில் கோஸ்மோபாலிடன் கிளப்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் வித்யா ராஜனுக்கு சிறப்பு மருத்துவ சேவை (Distinguished Medical Professional Award) விருது வழங்கப்பட்டது.
Also Read: தவெக வேட்பாளர்கள்- விஜயை விமர்சித்த எஸ்.பி.வேலுமணி
மருத்துவத் துறையில் வித்யா ராஜனின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, மனிதநேய பணி மற்றும் நோயாளி சேவையில் காட்டிய அக்கறையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை கோவை விமானப்படை குரூப் கேப்டன் ராகேஷ் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் செபி செபாஸ்டியன், ராஜேஷ் குமார், வரதராஜன், ராமநாதன், யுவராஜ், எல்சி மருத்துவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ரோட்டரி உறுப்பினர்கள், மருத்துவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு வித்யா ராஜனைப் பாராட்டினர்.

