மகாவீர் ஜெயந்தியில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது

கோவை: மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது; 721 மது பாட்டில்கள் பறிமுதல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Read news : கோடையில் கொட்டும் முடி – எளிய தீர்வு…!

இதையடுத்து, கோவை மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து மது விற்ற சண்முகராஜ் (25), காயத்ரி (25), கலையரசன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

READ NEWS :தேர்தல் களம்… பிரசாரத்திற்கு தனியாக போக வேண்டிய நிலை? வானதிக்கு உள்ளக எதிர்ப்பு!

அதேபோல், கெம்பட்டி காலனியில் மது விற்ற நாகராஜ் (39) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மது பாட்டில்களுடன், விற்பனை செய்யப்பட்ட பணமாக ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பீளமேடு பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றை போலீசார் சோதனை செய்தபோது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்களில் மொத்தமாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 721 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

திமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்கள் சூலூருக்கு வரும்- பட்டியலிட்ட கனிமொழி…

கோவை: கோவை சூலூரில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழி திமுக ஆட்சி அமைந்த உடன் எந்தெந்த இந்த தொகுதியில் கொண்டு வரப்படும் என்று பட்டியலிட்டார். கோவை சூலூர் பகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம்...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...