மகாவீர் ஜெயந்தியில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது

கோவை: மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது; 721 மது பாட்டில்கள் பறிமுதல்

Advertisement

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Read news : கோடையில் கொட்டும் முடி – எளிய தீர்வு…!

இதையடுத்து, கோவை மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து மது விற்ற சண்முகராஜ் (25), காயத்ரி (25), கலையரசன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

READ NEWS :தேர்தல் களம்… பிரசாரத்திற்கு தனியாக போக வேண்டிய நிலை? வானதிக்கு உள்ளக எதிர்ப்பு!

Advertisement

அதேபோல், கெம்பட்டி காலனியில் மது விற்ற நாகராஜ் (39) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மது பாட்டில்களுடன், விற்பனை செய்யப்பட்ட பணமாக ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பீளமேடு பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றை போலீசார் சோதனை செய்தபோது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்களில் மொத்தமாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 721 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...