கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம் டிஜிட்டல் மோசடி!

கோவை: தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 70). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு பிரேம்குமார் என்பவர் தொடர்பு கொண்டார்.

Click her to read news கோவையில் 10 மணி நேர போராட்டத்திற்குப் பின் தொழிலாளர்கள் உடல் மீட்பு!

அப்போது பிரேம்குமார் லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். 

அவர் குணசேகரனிடம உங்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் அந்த கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் தீவிரவாத இயக்கத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அதை குணசேகரன் மறுத்துள்ளார். அதன்பிறகு பிரேம்குமார் குணசேகரனை மிரட்டி பல்வேறு தவணைகளில் ரூ. 45 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். 

கோவை அருகே சிறுத்தை பீதி; “20 நாட்களாக நடவடிக்கை எங்கே?” – அண்ணாமலை கடும் விமர்சனம்

ஆனால் அதன் பிறகு அந்த பணத்தை அவருக்கு பிரேம் குமார் திருப்பிக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக குணசேகரன் விசாரித்த பிறகு தான் பிரேம்குமார் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து குணசேகரன் கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் – எஸ்.பி.வேலுமணி!

அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...