மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தேன்; சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் பேட்டி

கோவை: கோவை சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்து, மக்கள் பணிக்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத், தனது வேட்புமனுவை கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

Click here to read news: நான் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்து ஹிட்.. புலம்பும் பிரபல நடிகர்!

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதியில் இருந்து செண்டை மேளம் முழங்கவும், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஆதரவாளர்கள் ஊர்வலமாகவும் வந்தனர். இந்த ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத், வழக்கறிஞராக இருந்து மக்கள் பணி செய்துவந்த நிலையில், தற்போது அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி மக்களுக்கு சேவை செய்ய தவெக வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறினார்.

Click here to read news: கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி!

சிங்காநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் பல இன்னும் முழுமையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்தத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கிடையே நேரடி போட்டி நிலவும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்களின் எழுச்சியால் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக வருவது உறுதி என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.



Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் – எஸ்.பி.வேலுமணி!

அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...