கோவை: ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அனகா (27). இவரது ஒரு வயது மகள் சுதேசனா.
நேற்று காலை அனகா தனது மகள் சுதேசனாவிற்கு தடுப்பூசி செலுத்த தனது நண்பர் சுதாகர் என்பவருடன் பைக்கில் தொப்பம்பட்டிக்கு சென்றார்.
அங்கு ஒரு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
கணபதி அருகே வந்தபோது, சுதாகர் தன்னுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முயற்சி செய்தார். அதில் தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
அப்போது சுதேசனா மீது ஜேசிபி வாகனம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுதேசனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமி சுதேசனாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



Evan kodayo poyiruka…thevai than