கோவையில் பரிதாபம்: முந்திச் செல்ல முயன்றதால் 1 வயது சிறுமி பலி

கோவை: ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை கணபதி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அனகா (27). இவரது ஒரு வயது மகள் சுதேசனா.

நேற்று காலை அனகா தனது மகள் சுதேசனாவிற்கு தடுப்பூசி செலுத்த தனது நண்பர் சுதாகர் என்பவருடன் பைக்கில் தொப்பம்பட்டிக்கு சென்றார்.

அங்கு ஒரு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

Advertisement

கணபதி அருகே வந்தபோது, சுதாகர் தன்னுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முயற்சி செய்தார். அதில் தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.

அப்போது சுதேசனா மீது ஜேசிபி வாகனம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுதேசனா பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமி சுதேசனாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...