கோவை: கோவையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கோவையைப் பொறுத்த வரையில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களில் குவிந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 5 லட்சத்து 5 ஆயிரத்து 843 பேர் வாக்களித்து இருந்தனர்.
11 மணியளவில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்து 59 ஆயிரத்து 871 ஆக உயர்ந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து 380 ஆக உயர்ந்தது.
இதனிடையே காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோவை மாவட்டத்தில் மொத்தமாக 19 லட்சத்து 52 ஆயிரத்து 966 பேர் வாக்களித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ள நிலையில், 3 மணி நிலவரப்படி மொத்தமாக 71.16% பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சூலூர் தொகுதியில் 74.47 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
கோவையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 68.70% பேர் வாக்களித்திருந்த நிலையில், இந்த முறை 3 மணி நிலவரப்படி 74.47% பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


