கோவை: கோவை சிங்காநல்லூரில் வீட்டு கதவை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி தாமரை நகரைச் சேர்ந்தவர் தாமோதரன் (43). இவர் கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றார்.
பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் கோவை திரும்பிய அவர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாமோதரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


