அதிவேகமா? கட்டுப்பாடு இழந்த பைக் – கோவையில் துயரம்

கோவை:சத்தி ரோட்டில் பைக் தடுப்பு சுவரில் மோதி காயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் கோவை ராம் நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கோவையில் மாயமான காட்டெருமை… வனத்துறையினர் தேடல்

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் அஜித்குமார் பைக்கில் சத்தி ரோடு, சிஎம்எஸ் பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை…

கோவை: GCT கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற முடிந்தது அடுத்து...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...