கோவை: கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள் பார்சல் குடோன்களில் மோப்ப நாய் உதவுடன் போலிசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாநகர பேருந்து நிலையங்கள், பார்சல் அலுவலக குடோன்களில் போலிசார் மோப்ப நாய்களுடன் போதை பொருட்கள் தொடர்பாக சோதனை மேற்கொண்டனர்.
போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் போதையில்லா தமிழகம் போதையில்லா கோவை என்பதை மையமாக கொண்டு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை கோவை மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பார்சல் குடோன்களில் போலிசார் மோப்ப நாய்கள் உதவியுடன் போதை பொருட்கள் தடுப்பு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் பேருந்தில் பொருட்கள் வைக்கும் இடம் குடோன்களின் உள்ள மூட்டைகள் அட்டைபெட்டிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது இனிவரும் நாட்களிலும் இதுபோன்று தொடர்ந்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்வும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


