கோவை: கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுவதாக கூறி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள சேனல்களான அதர்மம் மனோஜ் வளையொலி, U2 Brutus, மைனர் முகநூல் மற்றும் பத்திரிக்கையாளர் தவம் ஆகிய சமூக வலைத்தளம்ங்களில் திருப்பரங்குன்றம் பைல்ஸ் உள்ளிட்டவற்றை முடக்கியதாகவும் இது கருத்து சுதந்திரத்தை கொடுக்கும் செயல் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்று குறிப்பிட்டு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்தும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


