கோவை: நீட் மறுத்தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவர்கள் அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.
மருத்துவப்படிப்பு நுழைவு தேர்வான நீட் மறுதேர்வு இன்று நடைபெற்ற முடிந்தது. மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மறுத்தேர்வு இன்று நடைபெற்றது.
கோவையில் 15 மையங்களில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
சில மாணவர்கள் கடந்த முறை ரத்து செய்யப்பட்ட தேர்வே எளிமையாக இருந்ததாக கூறினர். கடந்த முறை நடைபெற்ற தேர்வில் வினாக்கள் சற்று எளிமையாக இருந்ததாக கூறினர். மேலும் உயிரியல் பாடம், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக கூறினர்.
சில மாணவர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்வை விட இந்த தேர்வு எளிமையாக இருந்ததாகவும் கூடுதலாக 15 நிமிடங்கள் கொடுத்தது மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக வேதியியல் பாட கேள்விகள் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை எளிமையாக இருந்ததாக கூறினர்.
இன்னும் சில மாணவர்கள் அந்த 15 நிமிடங்கள் கொடுத்தது என்பது தேவையில்லை என்றும் தேர்வை தவிர்த்து தேர்வு எண் சரிபார்த்தல், புகைப்படம் ஒட்டுதல் ஆகியவற்றிற்கு தான் அந்த 15 நிமிடங்கள் சரியாக இருந்ததாக தெரிவித்தனர்


