கோவை: கோவையில் குற்றச்சம்பவங்களை கண்டறிய ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணிகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் ஒரு இடத்தில் இருந்தே ட்ரோன் மூலம் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் குற்றச்சம்பவங்கள் நடக்கும் பகுதிகளாக சில பகுதிகள் கண்டறியப்பட்டு டிரோன்களை ஏவி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பெரியநாயக்கன்பாளையம் வளம் மீட்பு பூங்கா, ஹவுசிங் யூனிட், சாமநாயக்கன்பாளையம், ஜே.ஜே.நகர் மலையடிவார பகுதிகள் மற்றும் கோட்டைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் ட்ரோன் கேமரா மூலம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெரியநாயக்கன்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை முன்பாக பொது இடங்களில் மது அருந்திய நபர்களை ட்ரோன் கேமராவில் பொருத்தப்பட்டிருந்த வாக்கி டாக்கி ஸ்பீக்கர் மூலம் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தவாறு கண்காணித்து எச்சரிப்பு விடுக்கப்பட்டது.



