கோவை மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்… அமைச்சர் சம்பத் குமார் அழைப்பு!

கோவை: கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் குமார், மாவட்டத்தில் 1,615 மையங்களில் இம்முகாம் நடைபெறுவதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு 3.01 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2.97 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இம்முகாமை முதலவர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் இம்முகாமைத் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

sambathkumar tvk minister

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Advertisement

“கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,124 மையங்களிலும், நகர்ப்புறங்களில் 491 மையங்களிலும் என மொத்தம் 1,615 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 32 இடங்களிலும், 222 நடமாடும் குழுக்கள் மூலமும் இம்முகாம் நடத்தப்படுகிறது.

Also Read: கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்…

Advertisement

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெற வேண்டும்” என்றார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் உயர்வுக்கு படி முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து2025-26-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி "உயர்வுக்கு படி" சிறப்பு முகாமினை மாநகராட்சி...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...