கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்…

கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பும்இரு சக்கர வாகன லைசன்சர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக சத்தம் எழுப்பும் வாகன சைலன்சர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அவ்வப்போது காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைகளை மேற்கொண்டு அந்த சைலன்சர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

Advertisement

கோவை மாநகரிலும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை நிறுத்தி போலீசார் அபராதம் விதித்து மீண்டும் அந்த சைலன்சர்களை உபயோகிக்க கூடாது என்ற வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் சில வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை வாகனங்களில் பொருத்திக்கொண்டு இயக்கி வருகின்றனர். அதன் காரணமாக அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சைலன்சர்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த இரு தினங்களில்
332 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மீது இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு,332 வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்கள் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில இன்று காட்சிபடுத்தப்பட்டது. அதனை கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு போக்குவரத்து காவல்துறையினரின் இப்பணியினை பாராட்டினர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

உலக போதை பொருள் ஒழிப்பு தின பேரணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: யுனைடெட் பார்மசி கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்துஉலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணிசட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யுனைடெட் பார்மசி...

Video

கோவையில் பள்ளி சீருடையில் விதிகளை மீறிய மாணவர்கள்- வீடியோ காட்சிகள்…

ஆர்.எஸ்.புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் ஆபத்தாக பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது