முகவரி கேட்பது போல் நடித்து முதியவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

கோவை : கோவை கவுண்டம்பாளையம் அருகே முகவரி கேட்பது போல் நடித்து முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த நல்லாம்பாளையம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனாட் (63). கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, தனது வீட்டின் அருகே குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்திருந்தார்.

Advertisement

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள், கணபதி பகுதிக்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர். முதியவர் வழிகாட்டிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த நபர், அவரது கையில் இருந்த செல்போனை திடீரென பறித்துக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெனாட் கூச்சலிடுவதற்குள், மூவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பெனாட் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

விசாரணையில், இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் ரத்தினபுரியைச் சேர்ந்த கிஷோர் (22), ரத்தினபுரி நாராயணசாமி நகரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் (21) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போனை மீட்டனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சங்கனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சாலையில் கொட்டிய டீசல்- வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்…

கோவை: சாலையில் கொட்டிய டீசலில் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். கோவையில் கான்கிரீட் மிக்சர் வண்டியில் இருந்து டீசல் கொட்டியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் வழுக்கி விழுந்தனர். ​கோவை, ராமநாதபுரம் ஆல் இந்தியா...

Video

கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை அன்னூரில் முதியவரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி, போலீஸ் விசாரணை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.