உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி படுகாயம்; சிகிச்சை பலனின்றி 52 வயது நபர் உயிரிழப்பு

கோவை : கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த 52 வயது நபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Advertisement

கோவை செட்டிபாளையம், போத்தனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (52), கடந்த ஜூன் 27-ஆம் தேதி மாலை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோவையிலிருந்து பழனி நோக்கி புறப்பட இருந்த அரசு பேருந்து, சாலையைக் கடக்க முயன்ற விஸ்வநாதன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு, இரு கால்கள், கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்தார்.

Advertisement

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் டிப்பர் லாரி வேலை நிறுத்தம்…

கோவை: கோவையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரிகளில் அரசு அனுமதி வழங்கியுள்ள எடையை மட்டுமே கொண்டு செல்வோம் என்றும் அதற்காக மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் கோவை...

Video

கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை அன்னூரில் முதியவரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி, போலீஸ் விசாரணை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.