தங்க நகை தொழிலாளர்களை பாதுகாத்திடுக- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தங்க நகை தொழிலாளர்களின் கோரிக்கை தினமாக அறிவிக்கப்பட்டு, கோவை காந்தி பார்க் ரவுண்டானா அருகில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எம். கண்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி. சந்திரன் பொருளாளர் பி. மருதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

பாரம்பரிய தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும். அரசாங்கம் விதித்துள்ள குறைந்தபட்ச ஊதிய முறையை அனைத்து நிறுவனங்களிலும் உடனடியாக அமுலாக்க வேண்டும். தங்க நகை தொழிலாளர்களுக்கு பொற்கொல்லர் நல வாரியத்தில் எளிதாகப் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும், தொழிலாளர்களை அலைக்கழிக்கக் கூடாது.

Advertisement

தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுவதைக் கண்டிப்பதுடன், அந்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். நல வாரியத்தின் பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

வெளிநாட்டு ஆபரணங்களின் இறக்குமதிக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும். பெரிய யூனிட்டுகளிலும், பேக்டரிகளிலும் தொழிலாளர் நலச் சட்டத்தை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சிறு, குறு பட்டறைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கிட வேண்டும். மேலும், அவர்களிடம் தொழில்வரி கேட்டு தொல்லை தரக் கூடாது.

Advertisement

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரம்பரியமிக்க இந்தத் தொழிலையும், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...