கோவையில் குடிநீரில் ஆய்வு செய்யும் பணிகள் துவக்கம்…

கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. மாநகராட்சியை பொறுத்தவரை சில இடங்களில் 24 மணி நேரம் ஒரு சில இடங்களில் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் மாற்றம் தென்படுவதாகவும் சில நேரங்களில் மஞ்சள் நிறத்திலோ அல்லது கழிவு நீர் கலந்தாற்போன்று குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஒரு இடங்களில் இதன் காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் பேரில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகளிலும் குடிநீர் குழாய்களிலும் உள்ள நீரை ஆய்வுக்காக எடுத்து அதில் குளோரின் அளவை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளோரின் அளவு சரியான விகிதத்தில் இல்லாத பட்சத்தில் அந்த பகுதியில் தீர்வு காணுவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...