கோவை: கோவையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு வருகிறது.
கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்கள், தமிழக அரசின் உத்தரவின்படி படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவு விதிமுறையை மீறியதாகக் கருதப்பட்ட 69 கடைகள் ஏற்கனவே மூடப்பட்டன.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்களை ஜூலை 1 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அந்த உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் அதிகாரிகள் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 213 பார்களும் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
அரசின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த பார்கள் செயல்பட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


